ஹாஸ்டல் பேய் பாத்ரூம் | Tamil Horror stories

இரவு ஏழு மணி….

இடம் : தமிழ் கார்ட்டூன் விடுதி.

சுக்கி தோளில் பெரிய பையுடனும் கைகளில் இரண்டு சிறிய கட்டப்பைகளுடனும் நின்று கொண்டிருக்கிறாள்.

சுக்கி அருகே அவள் அம்மா பத்திரகாளி நின்று கொண்டிருக்கிறாள். ஹாஸ்டல் வார்டன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வணக்கம்மா நான்தான் பத்திரகாளி இவன் என் மகள் சுக்கி. இவள ஹாஸ்டல்ல சேர்க்க வந்திருக்கோம். அப்படியா மா உட்காருங்க என அவர்கள் இருவரையும் அமர வைத்தார் ஹாஸ்டல் வார்டன்.

உங்க பொண்ணு எத்தனாவது வகுப்பு ன்னு சொன்னீங்க???.

ஏழாம் வகுப்பு.

சரி சரி.

டீச்சர் இங்கு சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கும்ல.

அருமையா இருக்கும்மா உங்க வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும். நீங்க எதையும் நினைத்து பயப்பட வேண்டாம்.

ரொம்ப நன்றி டீச்சர் என் புள்ளைய பத்திரமா பாத்துக்கங்க.

சரிம்மா நீங்க பயப்படாதீங்க நாங்க இருக்கோம்.

பின்னர் சில காகிதங்களில் கையெழுத்திட்டால் பத்திரகாளி. பின்னர் தன் மகளை நோக்கி, இப்போ தான் வாழ்க்கையில முதல் முறை ஹாஸ்டலில் சேர்ந்து இருக்கா.எதுக்கும் பயப்படாதே நல்ல மார்க் வாங்கிய உடன் நீ வீட்டிலிருந்தே படிக்கலாம், என்ன சரியா கண்ணு என்று பாசத்தோடு தன் மகளிடம் பேசினாள் பத்திரகாளி.

சரிமா என மனவருத்தத்துடன் சுக்கி அங்கிருந்து புறப்பட்டாள். ஹாஸ்டல் வார்டன் முன்னே செல்ல சுக்கி அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.

இங்கே பாரு சுக்கி இதுதான் உன்னுடைய ரூம்.

சுக்கி கதவின் மேலே பார்த்தாள்.

ரூம் நம்பர் 13 காட்டியது.

அந்த ரூம் அந்த பெரிய ஹாஸ்டலின் கீழ்தளத்தில் உள்ளது.

ஹாஸ்டல் வார்டன் கதவை தட்ட உள்ளிருந்து கதவை திறந்தாள் பூமாரி.

குட் நைட் மேடம்.

குட் நைட் குட் நைட். சுக்கி உள்ளே வாம்மா என சுக்கியை ஹாஸ்டல் வார்டன் உள்ளே அழைத்துச் சென்றாள்.

அந்த அறையில் பூமாரியை தவிர இன்னும் இரண்டு பெண்களும் இருந்தனர்.இங்க பாருங்க பிள்ளைகளா இதுதான் உங்க ரூமில் தங்க போற புது ஆள். இவள் பெயர் சுக்கி.இவ கூட எல்லாரும் அறிமுகம் ஆகிக்கோங்க.

ஹாய் ஐ அம் ரேவதி எனஒருவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

ரேவதி பெரிய மூக்கு கண்ணாடி அணிந்து திருநீரும் பூசிக்கொண்டு நல்ல படிப்பாளி போல் காட்சியளித்தாள்.

ஹாய் ஐ அம் கவிதா என மற்றொரு குரல் கேட்க

திரும்பிப்பார்த்தால் சுக்கி

தலையை விரித்துப் போட்டுக் கொண்டு மார்டன் பெண் போல் காட்சி அளித்தாள் கவிதா.

பின்பு மூவருக்கும் ஹாய் நான்தான் சுக்கி என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

ஹாஸ்டல் வார்டன் சரி எல்லாரும் தூங்குங்க என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் பூமாரி கதவை தாளிட்டுக் கொண்டாள்.

இதோ இதுதான் உன்னுடைய பெட் என கவிதா சுக்கியின் கட்டிலை காட்டினாள்.

தேங்க்யூ என்று மெல்லிய குரலில் கூறினாள் சுக்கி.

சிறிது நேரம் அந்த அறையில் மௌனம் நிலவியது

சுக்கி தான் கொண்டு வந்திருந்த துணி போர்வை முதலியவற்றை அந்த கட்டிலில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இங்க குளியலறை எங்கே உள்ளது என சுக்கி கேட்டாள்.அது வாப்பா நேரா போயி ரைட்டில் திரும்பினா பாத்ரூம் இருக்கும். அங்கு வரிசையா நிறைய பாத்ரூம் இருக்கும்.அதுல ஏதாச்சும் யூஸ் பண்ணிக்கோ என பூமாரி முன்வந்து கூறினாள். தேங்க்யூ என்று தன் இரவு உடையை எடுத்துக் கொண்டு குளிக்கும் அறைக்கு சென்று உடை மாற்ற போனால் சுக்கி.

பூமாரி கூறியது போல அங்கே வரிசையாக நிறைய கதவுகள் கொண்ட குளியலறை இருந்தது.

சுமார் 13 குளியலறை அடேங்கப்பா இவ்வளவு பாத்ரூமா என்று சுக்கி எண்ணிப் பார்த்தாள்.மொத்தம் 13 குளியலறைகள் அங்கிருந்தது.

சுக்கியின் ரோல் நம்பர் 12 என்பதால் பன்னிரண்டாவது குளியலறையில் தான் குளிப்பேன் என்று கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

ரொம்ப களைப்பா இருக்கு குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு போய் தூங்குவோம் என முடிவெடுத்தாள்.

கதவை தாளிட்டு தண்ணீர் பைப்பை திருவினாள்.

ஆனால் தண்ணீர் வரவில்லை.

என்னடா இது 13 பாத்ரூம் இருக்குது ஆனால் தண்ணீர் வரலையே.

ஒருவேளை டேங்கில் தண்ணீர் இல்லையோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் தண்ணீர் சத்தம் கேட்டது. அந்த அமைதியான இடத்தில் தண்ணீர் சத்தம் கேட்டதும் சுக்கிக்கு இதயம் படபடத்தது.

என்ன இது பக்கத்து அறையில் தண்ணீர் சத்தம் கேட்குது. நமக்கு மட்டும் தண்ணி வரலையா என கதவை திறந்து வெளியே சென்றாள். பதினொன்றாம் அறையை பார்த்தாள். அங்கு தண்ணீர் வரவில்லை.பதினொன்றாம் அறையில் தனிர் வரவில்லை என்றால் அப்போது எங்க இருந்து சத்தம் வந்துச்சு என பார்த்தபோது பதிமூன்றாவது அறையில் எட்டிப் பார்த்தாள்.

அங்கும் கதவு திறந்து இருந்தது. உள்ளே யாரும் உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்த அறைக்கதவை லேசாகத் தட்டினாள்.பதில் அளிக்காததால் அந்த 13ஆம் பாத்ரூம் அறைக்கதவை முன்னே தள்ளி முழுதாக திறந்தாள்.

அப்போது அங்கே பைப்பில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த சுக்கி பயந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கு யாருமே இல்லை. பதறிப்போய் முன்னே சென்று இருக்கும் அனைத்து பாத்ரூம் கதவை திறந்து பார்த்தாள். 13 பாத்ரூம்களிலும் ஒருத்தரும் இல்லை.யாருமே இல்ல அப்போ யாரு பைப்பை திறந்து விட்டு இருப்பா என்ன பயந்தாள் சுக்கி .

சரி பதின்மூன்றாம் அறையில் சென்றே குளிப்போம்.

பன்னிரண்டாம் பாத்ரூமில் தன் உடைகளை கழட்டி வைத்திருந்தாள். தன் உடைகளை கொக்கியில் மாட்டி இருந்தாள்.அதனை தன் தோளில் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்ட போது பைப்பை திறந்து வைத்தது ஞாபகம் வந்தது. உடனே சரி அதான் தண்ணி வரலை என பைப்பை மூடினாள் சுக்கி.

அப்போது…..

13வது அறையில்

தண்ணீர் சத்தம் நின்றது. மடமடவென்று 13வது பாத்ரூமை எட்டிப் பார்த்தபோது அங்கு தண்ணீர் வரவில்லை.

உடனடியாக சுக்கி அந்த 13வது பாத்ரூமுக்குள் சென்றாள். பைப்பை திருகினால் ஆனால் அங்கு பாத்ரூமில் தண்ணி வரவில்லை. என்ன இது இப்போ தான தண்ணி வந்துச்சு அதுக்குள்ள தண்ணிய காணோம் என பைப்பை மூடினால் சுக்கி.

ஒருவேளை கனெக்ஷன் தப்பா இருக்குமோ என சிந்தித்துக்கொண்டே சுக்கி அந்த அறையை விட்டு வெளியே வந்து 12வது பாத்ரூம் சென்று பைப்பைத் திருகினாள்.தண்ணீர் சத்தம் கேட்டது.

சரி சரி புரிஞ்சுபோச்சு புரிஞ்சு போச்சு.

12 வது பாத்ரூம் பைப்பை திருகினால் 13 வது பாத்ரூமில் தண்ணீர் வரும். என்னடா பாத்ரூம் இது வேடிக்கையாய் இருக்குது.

குளிப்பதற்காக 12வது பாத்ரூமில் இருந்து வெளியேறி மீண்டும் 13ஆவது பாத்ரூமிற்கு செல்ல முற்பட்டாள்.

அங்கே……

13 வது பாத்ரூம் தாளிட்டு இருந்தது. அதை பார்த்த சுக்கி பயந்து போனாள். என்ன இது கதவை இழுத்துப் பார்த்தாள் உள்பக்கமாக பூட்டி இருந்தது. சுக்கி பயத்தில் அலறினாள்.

வேகமாக கதவை முன்னே தள்ளினாள் ஆள் இருக்கு என ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு சுக்கி வேகமாக அலறி ஓடினாள்.

வேகமாக ரூம் நம்பர் 13 நோக்கி சென்றாள்.ரூமை அடைந்ததும் கதவை தட்டினாள்.

கவிதா கதவை திறக்க காப்பாத்துங்க என அலறினாள். பூமாரி என்னாச்சுப்பா ஏன் பயந்து ஓடி வர என கேட்டாள்.

சுக்கி பயத்தில் மூச்சு வாங்க ஆமாம் உன் இரவு உடை எங்கே என ரேவதி கேட்டாள்.

அது 13-வது பாத்ரூம் கதவு என சுக்கி பயத்தில் கூற அவள் 13வது நம்பர் பாத்ரூமை கூறியவுடன் ரூமில் இருக்கும் அனைவரும் பயத்தில் அலறினர்.

சுக்கி உன்கிட்ட சொல்ல மறந்துட்டோம் பா. நாங்க யாருமே அந்த 13வது பாத்ரூமுக்கு போகவே மாட்டோம்.

அந்த இடத்துல பேய் இருக்குன்னு சொல்லுவாங்க. நீ புதுசா வந்தனால உன்கிட்ட சொல்ல மறந்துட்டோம் என ரேவதி படபடத்த குரலில் கூறினாள்.

என்னோட இரவு உடை 13-வது பாத்ரூமிலேயே கழட்டிவெச்சுட்டு வந்துட்டேன் என சுக்கி பயத்தினால் நடுங்கிக்கொண்டே கூறினாள்.

வேண்டாம்பா அதை எடுக்கப் போகாத. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு ங்கிற மாதிரி அதை மறந்துடு என பூமாரி கூறினாள்.

ஆமாம் ஆமாம் மறுபடியும் 13வது பாத்ரூமுக்கு போகாத என ரேவதியும் தன் பங்கிற்கு அறிவுரை கூறினாள்.

இப்போ என்ன செய்வது என சுக்கி அவர்களை கேட்க….

ஒன்றும் வேண்டாம் இரவு 11 ஆயிட்டு எல்லாரும் லைட்டை அணைச்சுட்டு தூங்குவோம் என பூமாரி கூறினாள். ஆமாம் ஆமாம் தூங்குவதுதான் நல்லது என ரேவதியும் கவிதாவும் ஒப்புக்கொண்டனர்.

சுக்கியும் வேறுவழியின்றி தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்ள பூமாரி விளக்கை அணைத்தாள்.அந்த ரூமில் இருள் சூழ்ந்தது

இரவு ஒரு 12 மணி ஆனது.

அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த அறை நிசப்தமாக இருந்தது. சுக்கிக்கு மட்டும் புது இடம் என்பதால் கட்டிலில் அங்கிட்டும் இங்கிட்டும் புரண்டு கொண்டிருந்தாள்.

அப்போது யாரோ வேகமாக கதவை தட்டும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தாள் சுக்கி. ஒருவேளை ஹாஸ்டல் வார்டனாக இருக்குமோ என எழும்பி, பூமாரி பூமாரி ஹாஸ்டல் வார்டன் வந்திருக்காங்க கதவத்தொற என பூமாரியை எழுப்பி பார்த்தாள்.

ஆனால் அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

ரேவதி கதவத்தொற கதவைத் தட்டுறாங்க என ரேவதியை எழுப்பி பார்க்க அவளும் சத்தம் கேட்காது போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

திரும்பி கவிதாவை பார்க்க அவள் குப்புற படுத்துக்கொண்டு குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.சரி இனி வேலைக்காகாது நாமே திறப்போம் என கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.

அங்கே…….

யாருமில்லை பின்னர் தன் வலது புறமாக திரும்பி பார்க்க,

அங்கே……

தூரத்தில் சுக்கியின் இரவு உடையை அணிந்து கொண்டு அவள் உருவத்தில் பின்னே திரும்பி நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

அதை பார்த்ததும் சுக்கி திடுக்கிட்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.அந்த இடத்தில் யாரும் இல்லை.

பயத்தின் உச்சத்தில் அந்தப் பெண்ணை நோக்கி நடந்து கொண்டே சென்றாள் சுக்கி.

அழுகுரல் சத்தம் பலமாக கேட்டது.யார்……நீங்கள்????எதுக்கு அழுதுட்டு இருக்கீங்க???என தழுதழுத்த குரலில் கேட்டாள்.

ஆனால் பதில் எதுவும் வரவில்லை. அதனால் பயந்து போன சுக்கி அந்த உருவத்தின் முன்னே சென்று பார்த்தாள்.

அது வேறு யாருமில்லை சுக்கி உருவத்தில் ஒரு பெண் அவளுடைய இரவு உடை அணிந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

சுக்கி பார்ப்பதை பார்த்த அந்தப் பேய் கொடூரமாக சுக்கியை முறைக்க சுக்கி அலறிக்கொண்டு வேகமாக சென்றாள்.ரூம் நம்பர் பதிமூன்று பூட்டியிருந்தது.நாம திறந்துதான் வைத்தோம் அதுக்குள்ளே எப்படி??? என பூட்டியிருந்த கதவை வேகமாக தட்டினாள்.

பின்னால் இருந்து மூச்சு விடும் சத்தம் கேட்க சற்று பின்னே திரும்பிப் பார்த்தாள்.அந்த உருவம் தீக்காயத்துடன் சுக்கியின் அருகே நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்து சுக்கி அலறிக்கொண்டே கீழே விழுந்தாள். பயத்தில் அலறிக்கொண்டு முன் வாசலை நோக்கி சென்றாள்.அங்கே ஹாஸ்டல் வார்டன் தன் தலையை மேஜையில் வைத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அதை பார்த்த சுக்கி மேடம் மேடம் இந்த ஹாஸ்டளில் பேய் இருக்குது என ஹாஸ்டல் வார்டனை எழுப்பினாள்.

என்னம்மா சொல்ற என ஹாஸ்டல் வார்டன் எழும்ப அவர்கள் கண்ணத்திலும் தீக்காயத்துடன் கோரமாக இருந்தது.

ஹாஸ்டல் வார்டன் கன்னத்தில் என்னடி காயம் வந்துச்சு.

ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் தான் இருந்தாள் என் பாத்ரூம்ல வந்து குளிப்பா என ஹாஸ்டல் வார்டன் சுக்கியை மிரட்டினாள்.

மிஸ் மிஸ் உங்களுக்கு என்ன ஆச்சு என தழுதலுத்த குரலில் பயந்து கேட்டாள்.

ஹாஸ்டல் வார்டன் பள்ளார் என்று சுக்கியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .

சுயநினைவு இல்லாமல் சுக்கி மயங்கி விழுந்தாள்.

பின்னர் நேரம் ஆனது…….

கண்விழித்து பார்த்தபோது அனைவரும் பள்ளிக்கூடத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

மெல்ல கண்களை திறந்து எழும்பி பார்த்தாள் சுக்கி.

பூமாரி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.நேத்து நைட்டு அங்கு தூங்காம எதுக்குப்பா இங்க வந்து தூங்கின.

இந்த ஹாஸ்டல் எனக்கு பயமா இருக்கு.

இங்க பேய் இருக்கு என சுக்கி அழுது கொண்டே கூறினாள். ஹாஸ்டல் வார்டன் அங்கு வந்து ஏய் நீங்க என்ன பண்றீங்க பள்ளிக்கூடத்துக்கு கிளம்பாமல் என கேட்க முந்தைய நாளில் ஹாஸ்டல் வார்டனை பார்த்த சக்கியின் ஞாபகம் வந்தது.

உடனே அலறிக்கொண்டு ஹாஸ்டல் விட்டு வேகமாக சென்றாள்.

பக்கத்தில் இருந்த ஒரு ஆண்டியிடம் செல்போனை வாங்கி தன் அம்மாவிற்கு போன் அடித்தாள்.

அம்மா தயவு செஞ்சு என்னை ஹாஸ்டலில் இருந்து கூட்டிட்டு போங்க.எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்குமா என தழுதழுத்த குரலில் கூறினாள் சுக்கி.

சரிமா கவலைப்படாதே ஹாஸ்டலில் இருந்து கூட்டு போயிடலாம் என பத்திரகாளி ஆறுதல் கூறினாள்.

எப்படியாச்சும் இந்த ஹாஸ்டலை விட்டு வெளியேறி விடவேண்டும் என நினைத்துக்கொண்டே பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டாள் சுக்கி.

தான் எப்படியும் ஹாஸ்டலை விட்டு வெளியேறி விடுவோம் என நம்பிக்கையில் சிக்கி பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்.

மேலும் பேய் கதைகள் படிக்க.

மேலும் சிந்தித்து சிரிக்க தமிழ் மொக்கை ஜோக்ஸ்.

எங்களது தமிழ் கார்ட்டூன் சேனைலை subscribe செய்யவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *