Tamil kadi jokes | கடிஜோக்ஸ்-விலங்கு

ஜோக் 1

ஒரு ஊர்ல ரெண்டு புலி இருந்துச்சாம் . ரெண்டு புலிக்கும் சரியான பசியாம். உடனே காட்டுக்குள்ள போச்சாம் ஒரு புலி மட்டும் மானை வேட்டையாடி சாப்பிட்டுசாம். இன்னொரு புலி அதைச் சாப்பிடலையாம்.

ஏன்????

ஏன்னா அந்தப் புலி சபரிமலைக்கு மாலை போட்டு இருந்துச்சாம்.

ஜோக் 2

மூன்று பூனை ஓட்டலுக்கு சாப்பிட போச்சாம். இரண்டு போனை மாஸ்க் போட்டு மூஞ்சை மறச்சு இருந்துச்சாம்.

ஆனால் ஒரு பூனை மட்டும் மாஸ்க் போடலையாம்.

ஏன்????


ஏன்னா அது காட்டுப் பூனையாம். அதான் மூஞ்சை காட்டிக்கொண்டே இருந்துச்சாம்.

TAMIL MOKKA JOKES

ஜோக் 3

ஒரு யானை தண்ணீர் குடிக்க நதி பக்கமா போச்சாம். அப்போது கால் வழுக்கி ஆத்துக்குள்ள விழுந்திருச்சாம். பின்பு அந்த யானை எப்படி வெளியே வந்திருக்கும் ???

வேற எப்படி தண்ணியில நனைஞ்சு தான் வெளியே வந்து இருக்கும்

ஜோக் 4

ஒரு பெரிய மரத்தில் நிறைய குருவிகள் உட்கார்ந்து இருந்துச்சாம் அப்போது அந்த வழியாக வந்த வேடன் வானத்தை பார்த்து துப்பாக்கியால் சுட்டான். குண்டு சத்தம் கேட்டு எல்லா குருவிகளும் பறந்து போச்சாம். ஆனா ஒரு குருவி மட்டும் அங்கேயே இருந்துச்சாம்.

ஏன்????

ஏன்னா அந்த குருவிக்கு காது கேட்காதாம்.

ஜோக் 5

ஒரு நாய் ஒரு பெரியவரை பார்த்து கத்திக்கிட்டே இருந்துச்சாம்.

ஏன்????

ஏன்னா அது இஷ்டம் அது கத்தி சாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *