Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05

ஜோக் -01

ஒருமுறை ஒரு நாட்டின் அரசனுக்கும் பக்கத்து நாட்டின் அரசனுக்கும் சண்டையாம்.

அதனால் அந்த நாட்டு அரசன் பக்கத்து நாட்டு அரசனுடன் போர் புரிய சென்றாராம்.

ஆனால் அவர் கையில் ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் எரேசர் மட்டும் எடுத்துட்டு போனாராம்.

ஏன் ?????

வேற எதுக்கு எதிரி நாட்டு மன்னரை அழிக்கத்தான்.😂😂😂

ஜோக் -02

ஒருத்தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றானாம்.வீடு ஒரே இருட்டாக இருந்துச்சாம்.உடனே லைட் ஆன் பண்ண சுவிட்ச் போட்டானாம்.

உடனே பல்பு வெடிச்சிருச்சாம்

ஏன் ?????

ஏன்னா அது குண்டு பல்பாம்.

ஜோக் -03

பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட முடியாது.

ஏன் ????

ஏன்னா பீட்ரூட் சிவப்பு கலரில் இருக்கும் பச்சை கலரில் இருக்காது.

ஜோக் -04

ஒரு மீன் தண்ணில இருந்துச்சாம்.ஆனால் அதனால் நீச்சல் அடிக்க முடியவில்லையாம். ஏன்?????

ஏன்னா அந்த மீன் செத்துப் போச்சாம்.

ஜோக் -05

ஒருத்தன் மீன் சாப்பிடும் போது காலில் செருப்பு போட்டு சாப்பிட்டானாம்.

ஏன்?????

ஏன்னா மீன் ஓட முள்ளு கால்ல குத்திடும்ல

1 thought on “Tamil Kadi Jokes | மொக்க ஜோக்ஸ் -05”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *