கல்யாண பேய் | Tamil horror stories

சுனிதா ஒரு 52 வயது பெண்மணி.தன் கணவன் தங்கவேல் (வயது ஐம்பத்தி ஏழு) மற்றும் அவளது ஒரே மகள் வள்ளி (வயது 25 ).மூவரும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

அந்த வீட்டின் அருகே ஒரு சுடுகாடு இருந்தது.சுனிதாவின் கணவன் தங்கவேல் விலை குறைவு காரணமாக அந்த வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.ஆனால் அந்த இடத்தை வாங்குவதற்கு சுனிதாவிற்கு மனம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் குடியேறி இன்றோடு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிறது.

இரண்டு மாதங்களாக சுனிதா பட்டபாடு அவளுக்கு தான் தெரியும். இரவு நேரங்களில் நாய் சத்தமும் பிணங்களை எரிக்கும் வாடையும் அவளுக்கு சுத்தமாக சேரவில்லை. மேலும் இரவில் பூனை சத்தம் நாய் சத்தம் மற்றும் சலங்கை சத்தம் என இந்த சத்தங்களால் அவளுக்குத் தூக்கம் இல்லாமல் உடல் பிரச்சனையோடு மனரீதியான பிரச்சனையும் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் சுனிதாவின் மகள் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்.

அன்று…….

ஏய் சுனிதா நம்ம புள்ள பெரிய புள்ளையாயிட்டா சட்டுபுட்டுன்னு அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை தேடி கல்யாணம் முடிக்க வேண்டியது நம் பொறுப்பு. ஆமாங்க நானும் அதான் நினைச்சேன். இந்த வீட்டிலிருந்து நான் பைத்தியமாக மாறுறதுக்குள்ள அவளுக்கு நல்லபடியா ஒரு மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணி வைக்கணும்.

ஏய் எப்போ பார்த்தாலும் அவசக்கூடமா தான் பேசுவியா?????

என்ன செய்கிறது இந்த வீட்டை வச்சுக்கிட்டு இந்த வீட்டில் இருந்தால் பைத்தியமா தான் ஆவேன். என்னங்க பயமா இருக்குதுங்க போயும் போயும் இந்த சுடுகாட்டின் பக்கத்தில் இருக்கும் வீட்டை தான் வாங்குவீர்களா????.

ஏய் நான் இந்த வீட்டை வாங்கினால் தான் நம்ம புள்ளைக்கு நல்ல வரன் பார்க்க முடியும். சொந்த வீடு இல்லன்னா இப்போலாம் யாரும் மதிக்கிறது இல்லை .

ஒருத்தனும் நம்ம புள்ளைய காட்ட மாட்டான். அதனால இருக்கிறத வச்சுக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

சரி சரி பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா சரியென கணவன் மனைவி இருவரும் அந்த ஊரில் உள்ள மேட்ரிமோனி ஆபீஸில் சென்று தன் மகளின் ஜாதகம் மற்றும் பல விவரங்களை கொடுத்து அந்த இணையதளத்தில் தன் மகளின் விவரங்களை பதிவு செய்தனர்.

இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருக்க சுனிதாவின் மகள் வள்ளிக்கு ஒரு நல்ல வரன் கிடைத்தது.

என்னங்க மாப்பிள்ளை என்னங்க மாப்பிள்ளை ஐடி கம்பெனில வேலை பார்க்கிறாராம். பார்க்க நல்லா வாட்ட சாட்டமா அழகா இருக்காரு. சட்டுபுட்டுன்னு இவர்களையே பேசி முடிச்சிடலாம். குடும்பமும் நல்லாத்தான் இருக்கு.

சரி சரி என்று இருவரும் முடிவெடுத்தனர். பின்னர் அந்த மாப்பிள்ளை குடும்பம் நாளை பெண் பார்க்க வருவதாக தங்கவேல் இடம் தெரிவித்தனர்.

ஏய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நாளைக்கு வராங்களா வீட்டை அலங்கோலமாக வைக்காத நல்ல சுத்தமா வை என தன் மனைவியிடம் கட்டளையிட்டான் தங்கவேல்..

சுனிதாவும் அன்று இரவு தங்கவேல், மகள் வள்ளியும் தூங்கிக் கொண்டிருக்க சுனிதா மட்டும் முழித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தும் .வேலையை செய்து கொண்டிருந்தாள்.

பழைய சாமான்கள் அனைத்தையும் மூட்டைக் கட்டிக்கொண்டு வீட்டைத் துடைத்தும் பெருக்கியும் வேலை செய்து கொண்டிருந்தாள். பின்னர் மொட்டை மாடிக்குச் சென்று தேவையில்லாத பழைய சாமான்களை ஒரு புறமாக வைத்தாள்.

அப்போது மல்லிகைப்பூ வாசம் அடித்தது. என்னது இது இங்கு சுத்திமுத்தி ஒரு பூச்செடி கூட இல்லை. பிறகு எப்படி மல்லிகை பூ வாசம் அடிக்குது என குழம்பிப் போனாள் சுனிதா.

பின்னர் சுடுகாட்டில் ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அங்கே…

தலை நிறைய மல்லிகை பூவுடன் புது பட்டு சேலையை அணிந்து கொண்டு கை நிறைய வளையல்கள் உடன் ஒரு பெண் ஒரு கல்லின் மீது உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

அதனைப் பார்த்த சுனிதா திடுக்கிட்டுப் போனாள்…..

என்ன இது சுடுகாட்டில் புது பட்டுப்புடவை யோட யாரு யாரு இருக்கா என உற்றுநோக்கி பார்த்தாள்..

சுனிதா அவளை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண் சுனிதாவை நோக்கி திரும்பினாள். அதனைப் பார்த்த சுனிதா அதிர்ச்சி அடைந்தாள். அந்தப் பெண் உருவம் தன் மகள் வள்ளியை போலவே காட்சியளித்தது.

அதை பார்த்த சுனிதா அலறிக்கொண்டே வீட்டிற்கு உள்ளே வந்தாள். அவள் அலறல் சத்தம் கேட்ட தங்கவேல் மற்றும் அவன் மகள் இருவரும் பயத்தில் அம்மா என்ன ஆச்சு என்ன ஆச்சு என வள்ளி கேட்டாள்.

உன்ன மாதிரியே ஒரு புள்ளைய சுடுகாட்டில் பார்த்தேன் என்றாள் சுனிதா.

ஏய் கழுதை கழுதை தூங்காம கண்டதும் யோசிச்சுக்கிட்டு என்னடி பேசிட்டு இருக்குற.

என்னங்க நல்லா பாருங்க நம்ம புள்ள மாதிரி தான் இருந்துச்சு. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

சும்மா உளராதடி தூங்காம கனவு கண்டு கிட்டு. இப்போ என் பிள்ளையை பார்த்தேன் பூதத்தை பார்த்தேன் என்று உளறிக்கிட்டு இருக்க என்று அதட்டினான் தங்கவேல்.

இல்லங்க நான் சத்தியமா சொல்றேங்க.நான் நல்லா பார்த்தேன். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

அம்மா பயப்படாதீங்க மா நீங்க ராத்திரி பகலா உட்கார்ந்து வேலை செஞ்சதுனால மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கும்.இது எல்லாமே ஒரு மனப்பிரமை தான்.

பெருசா எடுத்துக்காதீங்க படுத்து தூங்குங்க எல்லாம் சரியாயிடும் என்றாள் வள்ளி.

பின்னர் அனைவரும் நிம்மதியாகப் படுத்து உறங்கினர்.

மறுநாள் காலை வீட்டை அனைத்தும் சுத்தப்படுத்திக் கொண்டு அந்தக் குடும்பம் மாப்பிள்ளை வீட்டாரு காக காத்துக்கொண்டிருந்தது.

வெகு நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. உடனே தங்கவேல் என்ன இது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இதோ வரேன்னு சொன்னாங்க ஆளையே காணோம் என மாப்பிள்ளை வீட்டாருக்கு போன் போட்டு கேட்டான்.

போன் அடித்தது ஒருவர் எடுத்தார்.

ஏங்க பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னிங்க. இன்னும் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. எப்ப வரீங்க என்றான் தங்கவேல். ஐயா யார் நீங்க இந்தக் கார்ல வந்த குடும்ப ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ஒருத்தரும் இல்லையா எல்லாரும் ஸ்பாட் அவுட் என்று ஒரு பேரதிர்ச்சியை தங்கவேலிடம் தெரிவித்தான்.

அதனை கேட்டு தங்கவேலு செல்போனை கீழே போட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

என்னங்க ஏன் அழுகிறீர்கள் ஏன் அழுகிறீர்கள் என சுனிதா தங்கவேலை பிடித்துக் கொண்டு கேட்டாள்.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சாம்மா என்றான். அதனைக் கேட்டதும் வள்ளி கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

என்னங்க நான் தான் சொன்னேன்ல இங்க நேத்து ராத்திரி நடந்ததற்கு நான் பார்த்ததற்கும் இன்றைக்கு நடந்ததுக்கும் ஏதோ சம்பந்த இருக்குங்க என்று தேம்பித் தேம்பி அழுதாள் சுனிதா.

அம்மா என்னால தான் அந்தக் குடும்பத்துக்கு இந்த நிலைமை. என்ன பார்க்க வராம இருந்தா அவங்க எல்லாரும் இந்நேரம் உயிரோடு இருப்பாங்க என வள்ளி ஒருபக்கம் அழுக தங்கவேல் யாரை சமாதானம் செய்வதறியாது திகைத்து அங்கு அவனும் அழுது கொண்டிருந்தான்.

பின்னர்

வள்ளியோ எனக்கு கல்யாணமே வேண்டாம் நான் அதிர்ஷ்டம் கெட்டவள். அதனாலதான் இப்படி நடக்குது என வேதனையோடு அழுதாள். யாரும் அழாதீங்க நாம ஒரு நல்ல ஜோசியரை பார்த்துட்டு வருவோம் என தங்கவேல் கூறினான்.

பின்னர் மூவரும் உடனடியாக அந்த ஊரில் இருந்த ஜோதிட லிங்கம் என்ற ஜோசியரை பார்க்க சென்றனர்.

ஜோதிட நிலையம் வந்தது.

அனைவரும் வெளியே அமர்ந்திருக்க

உள்ளே போகலாம் என ஒருவர் வந்து கூறினார்.

பின்னர் மூவரும் அந்த ஜோதிட லிங்கத்தை சந்தித்தனர்.சொல்லுங்கம்மா என்ன பொண்ணுக்கு ஜாதகம் பாக்கணுமா இல்ல உங்களுக்கு ஜாதகம் பார்க்கணுமா என்றான் ஜோதிட லிங்கம்.

ஐயா என் புள்ளைக்கு பொண்ணு பார்க்க வந்தவங்க கார் ஆக்சிடன்ட் இறந்துட்டாங்க ஐயா. என் புள்ள ஜாதகத்துக்கு என்னய்யா ஆச்சு என்னாச்சு ஏதாச்சு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா உடனே மறக்காமல் செய்து விடுவோம் என வேண்டிக் கேட்டான் தங்கவேல்.

பின்னர் பெண் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த ஜோதிட லிங்கம் சில நேரம் யோசித்துவிட்டு இங்க பாருங்க உங்க பொண்ணு ஜாதகம் நல்லா அருமையா தான் இருக்கு.

நல்லா இருக்கா அப்படின்னு ஏன் சாமி இப்படி ஆக்சிடென்ட் நடந்துச்சு.

பொண்ணு கிட்ட மாப்பிள்ளை ஜாதகம் இருக்கா?????.

இருக்கையா இதோ…

பின்னர் மாப்பிள்ளை ஜாதகத்தை வாங்கிப் படித்து அந்த ஜோதிடர் சற்று நேரம் கழித்து.. ஒரு முடிவுக்கு வந்தான். இங்க பாருங்கம்மா இந்தப் பையன் ஜாதகப்படி இவன் ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சு கல்யாணம் முடிச்சு இருக்கான்.

அவ கிட்ட இருந்த பணத்தை திருடிக் கொண்டு அவளை துரத்தி விட்டுட்டான். மேலும் அந்தப் பொண்ணு கர்ப்பமாக்கி விட்டு ஊரை விட்டு தப்பி ஓடிட்டான். அதனால மனசு உடைஞ்சு அந்த பெண் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டா.

நீங்க நினைக்கிற மாதிரி இந்த பையன் நல்ல பையன் கிடையாது.

தாயையும் வயித்துல இருக்கிற மூன்றுமாதம் பிள்ளையையும் கொன்ற பெரும்பாவி..அந்த பாவத்துக்கு பரிகாரமாக தான் அவனுக்கு இந்த மரண தண்டனை. அது மட்டும் இல்லாம அவங்க குடும்பமும் ஏழை மக்களுடைய சொத்தை புடுங்கி சேர்த்து வச்சிருக்காங்க.

அவங்கதான் தப்பு செய்றவங்க. தப்பு செய்றவங்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுக்கிறது சரிதானே என்றார் ஜோதிடர்.

அதனைக் கேட்டதும்,அப்படி என்றால் அந்தப் பையன் ரொம்ப மோசமானவன் என்று தங்கவேல் புலம்பிக் கொண்டிருக்க. சுனிதா மேலே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாள். இல்லங்க அன்னிக்கி ராத்திரி கல்யாண புடவைல ஒரு பெண் அழுதிட்டு இருந்தது சொன்னேன்ல ஒருவேளை அது இந்த ஜோசியக்காரர் சொல்ற அந்தப் பெண்ணா தான் இருக்குமோ என்றாள் சுனிதா.

நல்ல வேளை நம்ம பொண்ணு அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தா நம்ம புள்ளைக்கு அந்த பெண்ணோட நிலைமைதான்.

இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன். அழக பார்க்காத நல்லகுணம் இருக்கானு பாரு அப்படின்னு.

நல்லா வாட்ட சாட்டமா இருக்கான் என்று சொன்ன இப்ப பாரு அந்தநாசமா போனவன் எவ்வளவு பெரிய பாவம் செஞ்சிருக்கான் பார்.

வயித்தில இருக்கிற சிசு தாயையும் கொன்று இருக்கான்.

அவன் எல்லாம் மனுசனா????.

அப்போது அவர் மாமா அந்த இடத்திற்கு வந்தார்.

என்ன மாமா இந்த பக்கம் என தங்கவேல் தன் மாமனாரிடம் கேட்டான்.

தம்பி அந்த குடும்பம் மோசமான குடும்பம். அந்த பையன் ஏற்கனவே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டான் அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றான்.

அட இப்பதான் உங்களுக்கு தெரியுமா ஒன்னும் பிரச்சனை இல்ல

இனி என் புள்ளைக்கு நல்ல மாப்பிள்ளையா கண்டிப்பா தேடி பிடிப்பேன் என ஜோதிட நிலையத்தில் சபதமிட்டு கொண்டு தன் பெண்ணிற்கு வரம் பார்க்க புறப்பட்டான் தங்கவேல்.மற்றும் வள்ளியும் தனக்கான அவன் யார் என யோசித்துக்கொண்டே நடந்து சென்றாள்.

அப்போது….

ஒரு கணவன் மனைவி எதிர் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மனைவியின் தோளில் மாட்டியிருந்த பை கீழே விழுந்தது. அவள் எடுக்க கீழே குனிய, வயித்துல புள்ளைய வைத்து குனிரா பாரு என்று அவளை செல்லமாக திட்டிக் கொண்டே பையை தன் மனைவி தோளில் மாட்டி விட்டான்.

இதனைப் பார்த்த அந்த குடும்பம்

மாசமா இருக்கிற பொண்ணு இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறவந்தான் நம்ம பொண்ணுக்கு வேண்டும்.

இவன மாதிரி நம்ம புள்ளை மேல அன்பு பாசம் அக்கறை உடையவன தேடி கண்டு பிடிப்போம் என கிளம்பி சென்றனர்.

மேலும் பேய் கதைகளை படிக்க.

சிந்தித்து சிரிப்பதற்கு தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *