விடுகதை என்பது அறிவை சோதிக்கும் ஒரு வினோதமான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டு ஆகும். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக்கூடியது. விடுகதைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் புதிராகவும், சிந்தனைக்குரியதாகவும் இருக்கும்.
தமிழில் விடுகதைகள் பழமையானது. பழமொழிகள், கதைகள், திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களில் கூட இது காணப்படுகிறது. எளிய சொற்களில், மறைமுகமான வார்த்தைகளில் ஒரு பொருள் கொடுத்து அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் என்பதே விடுகதையின் அழகு.
எழுத்துப்பிழை, எண்ணிக்கைகள், பொழுது போக்கிற்காகவும், அறிவை மெருகூட்டவும் விடுகதைகள் பயனளிக்கின்றன. சிந்தனைக்கும், புதிர் போடுவதற்கும் உகந்த விடுகதைகளை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி மகிழலாம்!
உண்மை சொல்லப்போனால்… விடுகதைகள் விடைதேடும் மந்திரக் கதவுகள்தான்! 😃✨
கீழ்காணும் விடுகதைகளை படித்து மகிழவும்

விடுகதை 1:
தலையில் கிரீடம் வைத்த தங்க பழம் அது என்ன ?
விடை:
அன்னாசிப்பழம்
விடுகதை 2:
ஓடியாடி வேலை செய்த பின் மூலையில் ஒதுங்கி கிடப்பாள் அவள் யார் ?
விடை:
துடைப்பம்
விடுகதை 3:
கை பட்டால் சிணுங்கும் கன்னிப்பெண் கூச்சல் போயிட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார் ?
விடை:
கால்லிங் பெல்
விடுகதை 4:
கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான அவன் யார் ?
விடை:
கரும்பு
விடுகதை 5:
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் அவன் யார் ?
விடை:
வெங்காயம்
விடுகதை 6:
கொதிக்கும் கிணற்றில் குதித்து குண்டாகி வெளியே வருவான் அவன் யார்?
விடை:
பூரி
விடுகதை 7:
ஓர் அரண்மனையில் முப்பத்தி இரண்டு காவலர்கள் அவன் யார் ?
விடை:
பற்கள்
விடுகதை 8:
இலையுண்டு கிளை இல்லை பூ உண்டு மனமில்லை காய் உண்டு விதை இல்லை பட்டை உண்டு கட்டை இல்லை கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
விடை:
வாழை
விடுகதை 9:
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
விடை:
சோளம்
விடுகதை 10:
ஆகாரமாக ஏதாவது தந்தால் சாப்பிடுவான் ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவான் அவன் யார் ?
விடை:
நெருப்பு
விடுகதை 11:
படபடக்கும் பளபளக்கும் மனதுக்குள் இடம் புடிக்கும் அது என்ன ?
விடை:
பட்டாசு
விடுகதை 12:
வாழ் இல்லாமல் கேடயம் மாட்டு வைத்திருப்பான் போருக்கு போகாத வீரனவன் அவன் யார் ?
விடை:
ஆமை
விடுகதை 13:
மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள் அது என்ன ?
விடை:
நட்சத்திரம்
விடுகதை 14:
முகம் பார்த்து வளரும் முடிவில்லாமல் தொடரும் அது என்ன ?
விடை:
சொந்தம்
விடுகதை 15:
வயிற்றில் விரல் சுமப்பான் தலையில் கல் சுமப்பான் அவன் யார் ?
விடை:
மோதிரம்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -06.
- விடுகதைகள் -05.
மேலும் படியுங்கள் :


