விடுகதைகள் என்பது தமிழ் பாரம்பரியத்தில் முக்கியமான ஒரு பகுதியாகும். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிந்தனையை தூண்டும் ஒரு புதிர் வடிவமாக இருக்கிறது. விடுகதைகள் அறிவையும் நகைச்சுவையையும் சேர்த்து, ஒருவரின் கல்பனை சக்தியை வளர்க்க உதவுகின்றன. கேள்வி சுருக்கமாகவும் பதில் சுவாரஸ்யமாகவும் இருக்கும் விதத்தில் அமைக்கப்படுவது விடுகதையின் தன்மை.
விடுகதைகள் மூலமாக மொழி அறிவும், ஊக சக்தியும், மனப்பாடுத் திறனும் மேம்படுகின்றன. பழமொழிகள் போலவே, இவை வாழ்க்கை பாட்டை விளக்கும் ஒரு வடிவமாகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

விடுகதை 1:
நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் . நான் யார் ?
விடை:
வெங்காயம்.
விடுகதை 2:
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார் ?
விடை:
கடல் அலை
விடுகதை 3:
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன ?
விடை:
தராசு
விடுகதை 4:
தாடிக்காரன் மீசைக்காரன் கோவிலுக்கு போனால் வெள்ளைக்காரன் அவன் யார் ?
விடை:
தேங்காய்
விடுகதை 5:
என் குதிரை, கருப்பு குதிரை குளிப்பாட்டினால், வெள்ளை குதிரை அது என்ன ?
விடை:
உளுந்து
விடுகதை 6:
மண்ணை சாப்பிட்டுட்டு மண்ணிலே வாழ்ந்து மண்ணோடு மன்னனாவான் அவன் யார் ?
விடை:
மண்புழு
விடுகதை 7:
உயரத்தில் இருந்து விழுவான் அடியே படாது தரைக்கு தான் சேதாராமாகும் அது என்ன ?
விடை:
அருவி நீர்
விடுகதை 8:
பச்சை கீரை, சமைக்க உதவாது வலுக்க உதவும் அது என்ன ?
விடை:
பாசி
விடுகதை 9:
அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன ?
விடை:
தலை வகிடு
விடுகதை 10:
முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லை தொட்டால் பாட்டு பாடுவான் அவன் யார் ?
விடை:
ஆர்மோனியம்
விடுகதை 11:
காது பெரியது ஆனால் கேளாது வாய் பெரியது ஆனால் பேசாது வயிறு பெரியது அனால் உண்ணாது அது என்ன ?
விடை:
அண்டா
விடுகதை 12:
ராஜா உண்டு ராணியும் உண்டு மந்திரியும் உண்டு ஆனால் நாடு இல்லை அது என்ன ?
விடை:
சீட்டு கட்டு
விடுகதை 13:
மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வராது .அது என்ன ?
விடை:
வயது
விடுகதை 14:
வகை வகையாய் தெரியும் வண்னணப்படம் கண் மூடி காணும் காட்சிப்படம் அது என்ன ?
விடை:
கனவு
விடுகதை 15:
மென்மையான உடம்புக்காரன் பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் .அவன் யார் ?
விடை:
நத்தை
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -08.
- விடுகதைகள் -06.
மேலும் படியுங்கள் :


