Tamil vidukathaigal -08 – Best Vidukathaigal in Tamil

Here are some of the interesting Tamil riddles.

#விடுகதைகள் #TamilRiddles #ThinkSmart

Tamil vidukathaigal -08.

விடுகதை 1:

அனலில் பிறப்பான் ஆகாயத்தில் பறப்பான் .அவன் யார் ?

விடை:

புகை


விடுகதை 2:

வாலிலே எண்ணெய் தலையிலே கொள்ளி அது என்ன?

விடை:

விளக்குத்திரி


விடுகதை 3:

ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது அவர்கள் யார் ?

விடை:

எறும்பு கூட்டம்


விடுகதை 4:

காலில் தண்ணீர் குடிப்பான் . தலையில் முட்டை விடுவான் அவன் யார் ?

விடை:

தென்னை


விடுகதை 5:

சுற்றும் போது சுகம் தரும் அது என்ன ?

விடை:

மின் விசிறி


விடுகதை 6:

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரை கண்டு பதைபதைக்கிறான் அவன் யார் ?

விடை:

நெருப்பு


விடுகதை 7:

மேலிலும் துவாரம் கீழிழும் துவாரம் வளதிலும் துவாரம் இடதிலும் துவாரம் உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும்,.. நீரை எண்ணினுள் சேமித்து வைப்பேன் .நான் யார் ?

விடை:

பஞ்சு


விடுகதை 8:

கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ .அது என்ன ?

விடை:

உப்பு


விடுகதை 9:

கந்தல் துணி கட்டியவன் முத்து பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான் அவன் யார் ?

விடை:

சோளக்கதிர்


விடுகதை 10:

கடலில் கலக்காத நீர் யாவரும் குடிக்காத நீர். அது என்ன ?

விடை:

கண்ணீர்


விடுகதை 11:

கத்தி போல் இலை இருக்கும் , கவரிமான் பூ பூக்கும் , தின்ன பலம் கொடுக்கும் , தின்னாத காய் கொடுக்கும் .அது என்ன ?

விடை:

வேம்பு

Tamil vidukathaigal -08.

விடுகதை 12:

தொட்டு பார்க்கலாம் எட்டி பார்க்க முடியாது . அது என்ன ?

விடை:

முதுகு


விடுகதை 13:

கலர்பூ கொண்டைக்காரன் . காலையில் எழுப்பிவிடுவான் . அவன் யார் ?

விடை:

சேவல்


விடுகதை 14:

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க , ஸ்ரீ ரங்கம் தூங்க , திருப்பாற்கடல் தூங்க , ஒருவன் மட்டும் தூங்கவில்லை . அவன் யார் ?

விடை:

மூச்சு


விடுகதை 15:

ஏற்றி வைத்து அணைத்தால் , எரியும் வரை மணக்கும் . அது என்ன ?

விடை:

ஊது பத்தி


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *