🎉 வணக்கம் நண்பர்களே! 🎉
இன்று நம்ம வீடியோவில்/பேச்சில் சுவாரஸ்யமான மற்றும் சிந்தனைக்கு ஊக்கம் தரும் தமிழ் விடுகதைகள் (Vidukathai) பற்றி பார்க்கப்போகிறோம்!
விடுகதைகள் என்பது நம் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் இவை பிடிக்காம இருக்காது. சிரிப்போடும் சிந்தனையோடும் கலந்த ஒரு அழகான விளையாட்டு தான் விதுகதை.
இவை நம் தமிழ் பாரம்பரியத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் புதிர்களின் ஒரு பகுதி. தங்களது அறிவைச் சோதிக்க தயார் இருக்கிறீர்களா?
அப்படின்னா வாங்க, நம்ம முதல் விடுகதையோட தொடங்கலாம்! 🤔✨

விடுகதை 1:
ஓவென்று உயர்ந்த மலை நடுவே உடன்பிறப்பு இருவர் , ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை , பேசுவதும் இல்லை , அவர்கள் யார் ?
விடை:
கண் , மூக்கு
விடுகதை 2:
அடித்தாலும் உதைத்தாலும் அவன் அழ மாட்டான் அவன் யார் ?
விடை:
பந்து
விடுகதை 3:
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் , அதுஎன்ன ?
விடை:
விக்கல்
விடுகதை 4:
ஓடுவான் வருவான் ஒற்றை காலில் நிற்பான் . அவன் யார் ?
விடை:
கதவு
விடுகதை 5:
கூரை வீட்டை பிரித்தால் ஓட்டு வீடு , ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை , வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம் அது என்ன ?
விடை:
தேங்காய்
விடுகதை 6:
பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் அது என்ன ?
விடை:
சீப்பு
விடுகதை 7:
கையளவு உடம்புக்காரன் , காவலுக்கு கெட்டிக்காரன் . அவன் யார் ?
விடை:
பூட்டு
விடுகதை 8:
அதட்டுவான் , அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வர மாட்டான் .அவன் யார் ?
விடை:
நாக்கு
விடுகதை 9:
ஒரு புட்டியில் இரண்டு தைலம் . அது என்ன ?
விடை:
முட்டை
விடுகதை 10:
நீல வால் குதிரையின் வால் , ஓட ஓட குறையும் . அது என்ன ?
விடை:
தையல் ஊசியும் நூலும் .
விடுகதை 11:
தாய் குப்பையிலே , மகள் சந்தையிலே . அது என்ன ?
விடை:
நெல்
விடுகதை 12:
நான்கு கால்கள் உள்ளவன் , இரண்டு கைகள் உள்ளவன் , உட்கார்ந்து கொண்டிருப்பான் , உட்கார இடம் கொடுப்பான் . அவன் யார் ?
விடை:
நாற்காலி
விடுகதை 13:
வளைந்து நெளிந்து செல்பவள் , வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார் ?
விடை:
ஆறு
விடுகதை 14:
ஆனை விரும்பும் , சேனை விரும்பும் , அடித்தால் வலிக்கும் , கடித்தால் சுவைக்கும் , அது என்ன ?
விடை:
கரும்பு
விடுகதை 15:
உரச உரச குழைவான் , பூச பூச மனப்பான் அவன் யார் ?
விடை:
சந்தனம்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :


