“வணக்கம் நண்பர்களே! அறிவை வளர்த்திடும், சிந்தனைக்கு தீனி சேர்க்கும் ‘விடுகதைகள்’ உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🧩
இது வெறும் கேள்வி–பதில் விளையாட்டு அல்ல; இது நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஒரு சுவாரஸ்யமான பயணம்!
சிறிது சிந்தனை, சிறிது சிரிப்பு, நிறைய மகிழ்ச்சி — இதுதான் நம்முடைய விடுகதைகள்!
அப்படியானால், தயார் தானே? பார்க்கலாம், இன்று யார் புத்திசாலி என்று! 😉🧠”

விடுகதை 1:
சூடு பட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுவான்
விடை:
செங்கல்
விடுகதை 2:
வட்ட வட்ட பாய் வாழ்வு தரும் பாய் ஊரெல்லாம் சுற்றும் பாய் எல்லாரும் விரும்பும் பாய்.அவன் யார் ?
விடை:
ரூபாய்
விடுகதை 3:
பிறக்கும் பொது வால் உண்டு இறக்கும் பொது வால் இல்லை .அது என்ன ?
விடை:
தவளை
விடுகதை 4:
முற்றத்தில் நடப்பான் மூலையில் படுப்பான். அவன் யார் ?
விடை:
சீமாறு துடைப்பம்
விடுகதை 5:
ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல சூடு கொடுக்கும் தீயல்ல ,பளபளக்கும் தங்கம் அல்ல . அது என்ன ?
விடை:
சூரியன்
விடுகதை 6:
கிளை உண்டு ஆனால் இல்லை இல்லை . அது என்ன ?
விடை:
மான் கொம்பு
விடுகதை 7:
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய் . அவள் யார் ?
விடை:
பச்சை கிளி
விடுகதை 8:
என் தாயோ கடல் என் தந்தையோ சூரியன் என்னை விரும்பாத வீடே இல்லை . நான் யார் ?
விடை:
உப்பு
விடுகதை 9:
வெள்ளத்தில் போகாது , வெந்தணலில் வேகாது , கொள்ளை அடிக்க முடியாது , கொடுத்தாலும் குறையாது . அது என்ன ?
விடை:
கல்வி
விடுகதை 10:
இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு , தலையிலே ஒரு குடை . அவன் யார் ?
விடை:
காளான்
விடுகதை 11:
பார்த்தால் கல் , பல் பட்டால் நீர் .அது என்ன ?
விடை:
பனிக்கட்டி
விடுகதை 12:
பல் துலக்க மாட்டான் .ஆனால் அவன் பல் எப்பொழுதும் வெள்ளையாய் இருக்கும் . அவன் யார் ?
விடை:
பூண்டு
விடுகதை 13:
சூரிய ஒளியில் உணவை சமைப்பேன் . சுற்று சூழலை பேணி காப்பேன் . நான் யார் ?
விடை:
மரம்
விடுகதை 14:
வெள்ளை மாடு வாலால் நீர் அருந்தும் . அது என்ன ?
விடை:
விளக்கு
விடுகதை 15:
அட்டைக்கு ஆயிரம் கண்ணு , முட்டைக்கு மூணு கண்ணு . அவர்கள் யார் ?
விடை:
கட்டிலும் தேங்காயும்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



