“ஹேய் நண்பர்களே! 🤩
உங்கள் மூளை சுழல தயாரா? 🧠💫
நம்மை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும் அந்த அற்புதமான ‘விடுகதைகள்’ உலகத்திற்குள் இப்போ நம்ம போகப் போறோம்!
சில கேள்விகள் எளிமை, சில சின்ன சிக்கல் — ஆனா பதில் கண்டுபிடிச்சா அந்த சந்தோஷம் வேற லெவல்! 😄
அப்படியானால், தயார் ஆகுங்க நண்பர்களே — ‘விடுகதைகள்’ ஆரம்பிக்கலாமா? 🧩🔥”

விடுகதை 1:
தேடி கிடைத்த இறையை , கூடி கூடி உண்பவன் அவன் யார் ?
விடை:
காகம்
விடுகதை 2:
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைகனம் அதிகம் . அவன் யார் ?
விடை:
பம்பரம்
விடுகதை 3:
கழுத்தை வெட்டினால் கண் தெரியும் . அவன் யார் ?
விடை:
நுங்கு
விடுகதை 4:
உச்சி கிளையில் ஒரு முழு குச்சி ஊசல் ஆடுது . அது என்ன ?
விடை:
முருங்கைக்காய்
விடுகதை 5:
பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது ,அது என்ன ?
விடை:
பாம்பு
விடுகதை 6:
கடிப்பட மாட்டாள் , பிடிபட மாட்டாள் . அவள் யார் ?
விடை:
தண்ணீர்
விடுகதை 7:
குதி குதி என குதிக்கிறான் , கொட்டை பல்லால் சிரிக்கிறான் . அவன் யார் ?
விடை:
சோளப்பொரி
விடுகதை 8:
ஒற்றை காது காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான் . அவன் யார் ?
விடை:
ஊசி
விடுகதை 9:
மேகத்தின் பிள்ளை , அவன் தாகத்தின் நண்பன் . அவன் யார் ?
விடை:
மழை
விடுகதை 10:
அகன்ற வாய் உடையவன் , திறந்த வாய் மூடாதவன் . அவன் யார் ?
விடை:
செக்கு
விடுகதை 11:
தலையை வெட்ட வெட்ட கருப்பு நாக்கு நீட்டுகிறது . அது என்ன ?
விடை:
பென்சில்
விடுகதை 12:
வெட்கம் கெட்ட புளியமரம் , வெட்ட வெட்ட வளருது . அது என்ன ?
விடை:
தலை முடி
விடுகதை 13:
அவரோ பெரியவர் , அவர் இலையோ சிரியது,அவர் பெற்றது எல்லாம் கோணல் , அவர் யார் ?
விடை:
புளியமரம்
விடுகதை 14:
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் , தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னாமாக்குவாள் . அவள் யார் ?
விடை:
மீன் வலை
விடுகதை 15:
தட்டு போல் இருக்கும் ,அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது . அது என்ன ?
விடை:
தாமரை இலை
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



