“வணக்கம் நண்பர்களே! 🌟
சிந்தனையைத் தூண்டும் சிறிய கேள்விகள், ஆனால் பெரிய பதில்களை மறைத்து வைத்திருக்கும் உலகம் — அதுதான் ‘விடுகதைகள்’! 🧩
இங்கு ஒவ்வொரு கேள்வியும் ஒரு புதிர், ஒவ்வொரு பதிலும் ஒரு சிரிப்பும் ஒரு பாடமும்! 😄
உங்கள் புத்திசாலித்தனத்தையும் நகைச்சுவை உணர்வையும் சோதிக்க தயாராக இருக்கிறீர்களா?
அப்படியானால், தொடங்கலாமா நம் விடுகதைகள் பயணம்! 🚀🧠”

விடுகதை 1:
கருப்பு நிற தோட்டத்திலே மஞ்சள் பூ பூத்திருக்குதே . அது என்ன ?
விடை:
பொர்ணமி நிலா
விடுகதை 2:
அனைவரையும் நடுங்க வைப்பான் , ஆதவனுக்கு மட்டும் நடுங்குவான் . அவன் யார் ?
விடை:
குளிர்
விடுகதை 3:
நீரிலும் நிலத்திலும் வாழ்வான் , பாறையிலும் பதுங்கி வாழ்வான் . அவன் யார் ?
விடை:
தவளை
விடுகதை 4:
கல் எறிந்தால் போதும் , அரண்மனையே காலியாகிவிடும் , அது என்ன ?
விடை:
தேன்கூடு
விடுகதை 5:
கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் , ஆனால் தண்ணீரில் மட்டும் தவற விட்டு விடுவான் . அவன் யார் ?
விடை:
செருப்பு
விடுகதை 6:
மாடி மேல் மாடி கட்டி , குடி இருக்கும் இவனை தொட்டால் , குத்திடுவான் , பட்டால் கீறிடுவான் . அவன் யார் ?
விடை:
சப்பாத்தி கள்ளி
விடுகதை 7:
எங்க வீடு தோட்டத்தில் , தொங்குது ஏகப்பட்ட பச்சை பாம்புகள் , அது என்ன ?
விடை:
புடலங்காய்
விடுகதை 8:
சிவப்பு தொட்டியில் மலரும் பூ , சிடு சிடுத்தால் மறையும் பூ . அது என்ன ?
விடை:
சிரிப்பு
விடுகதை 9:
மீன் பிடிக்க தெரியாதாம் , ஆனால் வலை பின்னுவானாம். அவன் யார் ?
விடை:
சிலந்தி
விடுகதை 10:
சுற்றி கொண்டே இருப்பேன் . ஆனால் இவனுக்கு தலை வலிக்காது . இவன் யார் ?
விடை:
காற்றாடி
விடுகதை 11:
சிவப்பு சட்டைக்காரன் , வாயை பிளந்து வீதியோரங்களில் நிற்பான் . அவன் யார் ?
விடை:
தபால் பெட்டி
விடுகதை 12:
நித்திரையின் தூதுவன் இவன், நினைக்காமல் வந்து விடுவான் . இவன் யார் ?
விடை:
கொட்டாவி
விடுகதை 13:
பேசுவான் நடக்கமாட்டான் , பாடுவான் ஆடமாட்டான் . அவன் யார் ?
விடை:
வானொலி பெட்டி
விடுகதை 14:
அத்தையில்லா அத்தை அது என்ன அதை ?
விடை:
சித்திரத்தை
விடுகதை 15:
அண்ணன் தம்பி 2 பேரு , அவர்களை தொடுவது 12 பேரு ,அவர்கள் யார் ?
விடை:
கடிகாரம்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



