புதிர்களில் புதைந்து கிடக்கும் அறிவைத் திறந்து காட்டும் சாவி தான் தமிழ் விடுகதை. சாதாரணமாகத் தோன்றும் கேள்விக்குள்ளே ஒரு சின்ன திருப்பு, ஒரு நகைச்சுவை சுவை, ஒரு சிந்தனை மிச்சம் — இதுவே இதன் சிறப்பு. மனதைத் தூண்டும், சிரிப்பைத் தரும், ‘அஹா!’ என்ற உணர்வை கொடுக்கும் தமிழ் விடுகதைகள் உங்கள் கற்பனை உலகத்தைக் கூர்மையாக்க தயாராய் இருக்கின்றன. புதிர்களைப் 풀ிக்க தயாரா? வாருங்கள் தொடங்கலாம்!

விடுகதை 1:
அலை அலையாய் ஆடி வரும் , கடல் அல்ல . நிலையாக இருக்காது . நிலவும் அல்ல . அது என்ன ?
விடை:
புகை
விடுகதை 2:
அறிவின் மறுபெயர் , இரவில் வருவது, அது என்ன ?
விடை:
மதி
விடுகதை 3:
இடி இடிக்கும், மின்னல் மின்னும் , மழை பெய்யாது , அது என்ன ?
விடை:
பட்டாசு
விடுகதை 4:
எப்போதும் கிடைக்காத மதி, எல்லோரும் விரும்பும் மதி, அது என்ன ?
விடை:
நிம்மதி
விடுகதை 5:
சினந்து சிவந்தவன் , சிதைந்து போவான் , அவன் யார் ?
விடை:
நெருப்பு
விடுகதை 6:
மரத்துக்கு மேலே பழம் , பழத்திற்கு மேலே மரம் . அது என்ன ?
விடை:
அன்னாசிப்பழம்
விடுகதை 7:
பார்த்ததோ இரண்டு பேர் ,எடுத்ததோ 10 பேர் , ருசி பார்த்ததோ ஒரே ஒருவன். அவர்கள் யார் ?
விடை:
கண் , கைவிரல்கள், வாய்
விடுகதை 8:
ஊசி போல் இருப்பான் , ஊரையே எரிப்பான் . அவன் யார் ?
விடை:
தீக்குச்சி
விடுகதை 9:
பத்து பேர் சேர்ந்தால் ,பஞ்சம் போக்குவார்கள், அவர்கள் யார் ?
விடை:
கைவிரல்கள்
விடுகதை 10:
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது , அது என்ன ?
விடை:
உப்பு
விடுகதை 11:
மரத்தின் மேலே தொங்குவது , மலை பாம்பு அல்ல . அது என்ன ?
விடை:
மரத்தின் விழுது
விடுகதை 12:
நாம் சாப்பிடுவதற்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை நம்மால் சாப்பிட முடியாது . அது என்ன ?
விடை:
தட்டு
விடுகதை 13:
கருப்பு நிறமுடையவன் , கபடம் அதிகம் கொண்டவன் , கூவி அழைத்தால் வந்துவிடுவான் , கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் . அவன் யார் ?
விடை:
காகம்
விடுகதை 14:
வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு , வயிறில்லை . அது என்ன ?
விடை:
அகப்பை
விடுகதை 15:
கன்று நிற்க , கயிறு மேயுது . அது என்ன ?
விடை:
பூசணிக்கொடி
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



