
விடுகதை 1:
கதிர் அடிக்காத களம் , உயிர் பறிக்கும் காலம் . அது என்ன ?
விடை:
போர்க்களம்
விடுகதை 2:
பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன ?
விடை:
வாழை பூ
விடுகதை 3:
தொட்டு விட்டால் மூடி கொள்ளும் , பச்சை மாளிகையின் ஜன்னல்கள் . அது என்ன ?
விடை:
தொட்டால் சுருங்கி செடி
விடுகதை 4:
நான் காற்றை போல எடை இல்லாதவன் , நான் இருந்தால் அந்த இடத்தில குறையும் . அது என்ன ?
விடை:
ஓட்டை
விடுகதை 5:
மிருகங்கள் இல்லாத காடு எது ?
விடை:
முக்காடு
விடுகதை 6:
சுடாதா ரெட்டை குழல் துப்பாக்கி . அதி என்ன ?
விடை:
மூக்கு
விடுகதை 7:
வேலியை சுற்றிய நீள பாம்பு . அது என்ன ?
விடை:
அரைஞாண் கயிறு
விடுகதை 8:
கண் சிமிட்டும் ஒன்று , மணி அடிக்கும் ஒன்று , கணீர் வடிக்கும் இன்னொன்று . அது என்ன ?
விடை:
இடி மின்னல் மழை
விடுகதை 9:
கண் இல்லா என்னால் அழ முடியும்.ஆனால் பார்க்க முடியாது. நான் யார் ?
விடை:
மெழுகுவர்த்தி
விடுகதை 10:
பேசாத வரை நான் இருப்பேன், பேசினால் நான் உடைந்து விடுவேன் . நான் யார் ?
விடை:
அமைதி
விடுகதை 11:
முதலெழுத்து …தமிழின் முதலெழுத்தின் அடுத்த எழுத்து … கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை…மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை. அது என்ன ?
விடை:
ஆபத்து
விடுகதை 12:
விட்டம் போட்டு வீடு கட்டியும் ,விசிறி மாட்ட இடம் இல்லை . அது என்ன ?
விடை:
மூக்கு
விடுகதை 13:
மரக்கிளையை தலையில் தூக்கியபடி துள்ளி ஓடுவான் . அவன் யார் ?
விடை:
கலைமான்
விடுகதை 14:
நாலு மரம் பிடித்து வர ..துடுப்பு துளாவி வர …துரை மகன் ஏறி வர ..அவன் யார் ?
விடை:
யானை
விடுகதை 15:
அடுக்கி வைத்த அழகு சிற்பங்கள் அடி விழுந்தால் அழகு போகும் அது என்ன ?
விடை:
பற்கள்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



